Friday, June 24, 2011

காதலர் தினம்.....

கவிதை எழுத தெரியுமா
என்றாள்
உன் பெயர் எழுதுவேன்
என்றேன்
காதலா? என்றாள்
அழைத்தாயா என்றேன்
கண்டிப்பாக...
=========

முதல் தீண்டல், முதல் சீண்டல்
முதல் முத்தம் முதல் கலவி
முதல் வியர்வை முதல் கோபம்
முதல் சிரிப்பு
அனைத்தையும் சாய்த்தது
என் உடல் சோர்வின் போது நீ கேட்ட கேள்வி
எப்படிடி இருக்க?
==========

உலையரிசி வாங்கல
உடுப்பெதும் எடுக்கல
கரண்டு பில்லு கட்டல
விளக்கேதுவும் எரியல
பிள்ளை மட்டும் நாலஞ்சு
======

கணக்கு வாத்தியார் கையால்
பிரம்படி வாங்கினேன்
வலியுடன் திரும்பினால்
அரைக்கண்ணால் சிரிக்கிறாள்.
அடடா
அடுத்த கணக்கும்
தப்பு.
==========
ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம்
ஞாபகம் வருகிறது
மலர்ச்சியாய் இருந்த என் முகம்
இப்போதும் அதே ஒற்றை ரோஜா
என் கல்லறையின் மேல்
வைத்தது
யாரோ?
=========
காலையில் எழுந்து கதவை
திறந்தால், எதிரில் அவள் போட்ட கோலம்
நான்கு புள்ளி
"வீட்டில்"
இல்லையோ ?
========
மழையின் சாரல்
கதவை அடைத்தேன்
நனைந்தபடி அவள்

புண்ணிய பூமி
உடல் நனைத்த நீரை
உள் வாங்கி தாகம் தணிக்கிறது.
=========
எச்சில் விழுங்கினேன் நான்.
========



பார்க்கிறானா என்று பார்த்தேன்
அதை தவிர ஒன்றுமே அவன் செய்யவில்லை
கேட்டால்
சொல்கிறான் என் பெயரை மட்டும்
விட்டுவிட்டேன் அவனை காதலிக்க மாட்டேன் என்ற
எண்ணத்தை.
=======


மீசை மழித்து வந்து நின்றான்
கன்னம் புண் படுமென்று
மடையன்
அது தானடா சிலிர்ப்பு
தள்ளிப் போ
அப்புறம் தான்
முத்தம்,


===============


ஜீவ காருண்ய சங்கங்களே
மிருகங்களின் அவல நிலை
குறித்து மட்டுமே உங்கள் கவலை
காதலால் மிருகமான மனிதர்கள்
குறை கேட்பு நாள் என்று
காதலால் மனிதரானவர்கள் நிறை
கேட்பு நாள் இன்று.

==============

மாமன் மனசு கவர
மல்லிகைப்பூ வெச்சு வந்தேன்
மாருல தேக்கி வெச்ச
ஆசையை
கதைக்க வந்தேன்
மீசை முறுக்கையிலே என் நிலையை
மறந்து வந்தேன்
சொல்லனும்னு நெனச்ச அதை சொல்லாமலே
எனை மறந்தேன்.
அவனை நெனச்சு நான் சமஞ்ச கதை
சொல்லலியே
நெனச்சு நெனச்சு தான் குமைஞ்ச கதை
சொல்லலியே
சின்ன வயசு மாமனுக்கும்
பெரிய வயசு மாமனுக்கும்
வித்தியாசம் ஏதும் இல்ல.
ஆனா
எனக்கிருக்கும் ஞாபகங்கள்
நீ மறந்து போனதென்ன
===========

வெள்ளை சட்டை
பையில் சிவப்பு
குங்குமமாம்
கோவிலுக்கா சென்றாய்
அவள் நெற்றியில் கலைந்ததா

காதலர் தினம்.....

வெள்ளை சட்டை
பையில் சிவப்பு
குங்குமமாம்
கோவிலுக்கா சென்றாய்
அவள் நெற்றியில் கலைந்ததா

பார்த்ததும் பளிச் என்று சிரித்தான்
புகை பிடித்தாலும்
அவன் வியர்வையில் கிறங்கினேன் நான்
விடியலில் விட்டான்
பழக்கத்தை

வாடிய மலர்கள், சிவந்த கண்கள்
கலைந்த தலை
கசங்கிய ஆடைகள் அனைத்தும் சொல்லும்
என் பணியின்
தீவிரம், குழந்தையின் புன்சிரிப்பு கவிதை எழுத தெரியுமா
என்றாள்
உன் பெயர் எழுதுவேன்
என்றேன்
காதலா? என்றாள்
அழைத்தாயா என்றேன்
கண்டிப்பாக...
=========

முதல் தீண்டல், முதல் சீண்டல்
முதல் முத்தம் முதல் கலவி
முதல் வியர்வை முதல் கோபம்
முதல் சிரிப்பு
அனைத்தையும் சாய்த்தது
என் உடல் சோர்வின் போது நீ கேட்ட கேள்வி
எப்படிடி இருக்க?
==========

உலையரிசி வாங்கல
உடுப்பெதும் எடுக்கல
கரண்டு பில்லு கட்டல
விளக்கேதுவும் எரியல
பிள்ளை மட்டும் நாலஞ்சு
======

கணக்கு வாத்தியார் கையால்
பிரம்படி வாங்கினேன்
வலியுடன் திரும்பினால்
அரைக்கண்ணால் சிரிக்கிறாள்.
அடடா
அடுத்த கணக்கும்
தப்பு.
==========

ஒற்றை ரோஜாவை பார்க்கும் போதெல்லாம்
ஞாபகம் வருகிறது
மலர்ச்சியாய் இருந்த என் முகம்
இப்போதும் அதே ஒற்றை ரோஜா
என் கல்லறையின் மேல்
வைத்தது
யாரோ?
=========
காலையில் எழுந்து கதவை
திறந்தால், எதிரில் அவள் போட்ட கோலம்
நான்கு புள்ளி
"வீட்டில்"
இல்லையோ ?
========

மழையின் சாரல்
கதவை அடைத்தேன்
நனைந்தபடி அவள்

புண்ணிய பூமி
உடல் நனைத்த நீரை
உள் வாங்கி தாகம் தணிக்கிறது.
=========
எச்சில் விழுங்கினேன் நான்.
========



பார்க்கிறானா என்று பார்த்தேன்
அதை தவிர ஒன்றுமே அவன் செய்யவில்லை
கேட்டால்
சொல்கிறான் என் பெயரை மட்டும்
விட்டுவிட்டேன் அவனை காதலிக்க மாட்டேன் என்ற
எண்ணத்தை.
=======


மீசை மழித்து வந்து நின்றான்
கன்னம் புண் படுமென்று
மடையன்
அது தானடா சிலிர்ப்பு
தள்ளிப் போ
அப்புறம் தான்
முத்தம்,


===============


ஜீவ காருண்ய சங்கங்களே
மிருகங்களின் அவல நிலை
குறித்து மட்டுமே உங்கள் கவலை
காதலால் மிருகமான மனிதர்கள்
குறை கேட்பு நாள் என்று
காதலால் மனிதரானவர்கள் நிறை
கேட்பு நாள் இன்று.

==============

மாமன் மனசு கவர
மல்லிகைப்பூ வெச்சு வந்தேன்
மாருல தேக்கி வெச்ச
ஆசையை
கதைக்க வந்தேன்
மீசை முறுக்கையிலே என் நிலையை
மறந்து வந்தேன்
சொல்லனும்னு நெனச்ச அதை சொல்லாமலே
எனை மறந்தேன்.
அவனை நெனச்சு நான் சமஞ்ச கதை
சொல்லலியே
நெனச்சு நெனச்சு தான் குமைஞ்ச கதை
சொல்லலியே
சின்ன வயசு மாமனுக்கும்
பெரிய வயசு மாமனுக்கும்
வித்தியாசம் ஏதும் இல்ல.
ஆனா
எனக்கிருக்கும் ஞாபகங்கள்
நீ மறந்து போனதென்ன
===========