Tuesday, September 20, 2011

பிடித்தமா

என் உள்ளங்கை வியர்வையை
உன் விரல்களுக்கு மாற்றுதல்
பிடித்தமா

உடல் சூட்டை இதழேற்றி
நுதல் சேர்த்தல்
பிடித்தமா

இடம் பார்த்து வலம் பார்த்து
முகம் பார்த்தல்
பிடித்தமா

பேசியும் பேசாமல் இருத்தல்
பிடித்தமா
பேசாமல் பேசுதல்
பிடித்தமா

கண்ணின் கருவிழி
பிடித்தமா
அதை மூடிய இரு இமை
பிடித்தமா

கண் சிரிக்கும் பொய் கோபம்
பிடித்தமா
அகம் நொறுக்கும் ஆங்காரம்
பிடித்தமா

இடுப்போரம் இரு விரல்
பிடித்தமா
இரு கன்னம் இரு கைகள்
பிடித்தமா

சாலையோர சந்தடிகள்
பிடித்தமா
பூங்காக்களின் மறைவிடங்கள்
பிடித்தமா

காத்திருக்கும் தவிப்பனைத்தும்
பிடித்தமா
தவிக்க வைக்கும் காத்திருப்பு
பிடித்தமா

அகம் நனைக்கும் அவன் காதல்
பிடித்தமா
முகம் மலர்ந்த அவன் நினைவு
பிடித்தமா

தினம் நூறு கேள்வி
தான்
கேட்க பிடித்தமா
பதில் இன்றி
தான்
தவிக்க பிடித்தமா

உன் நினைவு அவன் நினைவாய்
இருந்து விடல்
பிடித்தமா
இரு நினைவும் ஒன்றென்றே
உணர்ந்து விடல்
பிடித்தமா

அவனின்றி உலகில்லை
என்பதில் பிடித்தமா
அவனில்லை என்றுணர்ந்து
மாய்ந்து போதல் பிடித்தமா

No comments: